அன்றாட பழக்கவழக்கத்தால் உடல் பருமனாகும் அபாயம்

பொதுவாக ஒருவரின் அழகை நாம் தீர்மானிப்பது அவரின் உடல் கட்டமைப்பை வைத்து தான். ஒருவர் மிகவும் மெலிந்து இருந்தாலும் சரி அல்லது மிகவும் குண்டாக இருந்தாலும் சரி அவரின் தோற்றம் எடுப்பாக இருப்பது கடினமே. சரியான கட்டமைப்புடன் இருந்தால் வலிமையாகவும், அழகாகவும் தோன்றும்.

முக்கியமாக உடல் பருமன் என்பது பலரும் சந்திக்கும் பிரச்சினை. அது அழகை மட்டும் அல்லாது ஆரோக்கியத்தையும் கெடுக்கும். இதனால் அவர்கள் தினசரி பல சிக்கல்களுக்கு உள்ளாகின்றனர். திடீரென்று எடை அதிகமாக கூடி விட்டதாப உடல் எடை அதிகரிக்க பல காரணங்கள் உள்ளன.

அதற்கு நம் உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையே முக்கிய காரணம். இதற்கு குடும்ப பாரம்பரியம் அல்லது உடலில் உள்ள பாதிப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையே பிரதான காரணமாக பார்க்கப்படுகிறது.

நாம் அன்றாடம் செய்யும் காரியங்களில் நம் உடல் மெட்டபாலிசத்தில் (பரிணாம வளர்ச்சி) தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்மில் பல பேருக்குதெரிவதில்லை. கீழ் கூறிய டிப்சை படித்து எடை அதிகரிக்காமல் கவனமாக இருப்பது எப்படிஎன்பதை நன்கு அறிந்துக் கொள்ளலாம்.

தூக்கம்............ போதிய தூக்கம் கிடைக்க வில்லையா? அப்படியானால் எடை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் போதிய தூக்கம் இல்லாதவர்களுக்கு அதிகமாக பசிக்கும். அதனால் அவர்கள் உட்கொள்ளும் உணவின் அளவும் கூடும்.

மதுபானம்.......... பல ஆண்கள் கடின உழைப்பிற்கு பின் அலுப்பு தெரியாமல் இருக்க மது அருந்துவர். இது மன அழுத்தத்தை குறைத்து மனதை லேசாக வைத்திருந்தாலும், காலப்போக்கில் எடையை அதிகரிக்க செய்யும்.

காலை உணவு........ மற்ற வேளைகளில் நாம் உண்ணும் உணவை விட காலை உணவு தான் மிகவும் முக்கியமானது. இரவு நன்றாக தூங்கிய பின் காலை நம் உடம்பிற்கு போதிய அளவு எரிபொருள் வேண்டாமா? காலை சாப்பிடவில்லையென்றால் நம் மெட்டபாலிசம் பாதிக்கப்படும்.

அளவில்லாமல் சாப்பிடுவது.......... அதிகமாக சாப்பாடு பரிமாறிவிட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அனைத்தையும் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சரியான அளவு உணவே ஆரோக்கியத்தை தரும்.

உடற்பயிற்சி...... கண்டிப்பாக உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். விளையாட்டு, உடற்பயிற்சி, நடை பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டால் தேவைக்கு அதிகமான கலோரிகளை எரிக்கும். அது உங்கள் உடல்கட்டமைப்பு மற்றும் தன் னம்பிக்கையை அதிகரிக்க உதவும்.

இரவு விருந்து......... இரவு விருந்து முடிந்த பின் இனிப்பு பலகாரங்களை பொதுவாக உண்ணும் பழக்கம் உள்ளோர், அதற்கு பதில் சூடான தேநீர், சோடா அல்லது கலோரி இல்லாத உணவை உண்ணலாம்.

ஓட்டல் கடை........ கடும் பசியில் இருக்கும் போது கடைக்கு போனால், பசியை போக்க ஆரோக்கியமற்ற உணவை தான் முதலில் தேர்ந்தெடுப்போம். அதற்கு பதில் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு சென்றால் பசி சிறிதளவாவது அடங்கும்.

கடையிலும் ஆரோக்கியமான பொருளை வாங்கலாம் அல்லது போகும் வழியில் ஒரு சாண்ட்விச் அல்லது க்ரில் செய்த கோழிக்கறி போன்றவற்றை சாப்பிடவும். நீங்கள் விமான நிலையத்தில் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

சென்ற இடத்தில் பசி எடுத்தால் அருகில் என்ன கிடைக்கிறதோ அதை வாங்கி உண்ணுவோம் அல்லவா? பெரும்பாலும் நமக்கு கிடைக்கும் உணவு அனைத்தும் ஜங்க் உணவுகளே. அதனால் முன் கூட்டியே திட்டம் தீட்டி வீட்டிலிருந்தே சாண்ட்விச், பச்சை கேரட், நற்பதமான பழங்கள், பழச்சாறு என்று எதாவது எடுத்துக் கொள்ளவும்.

தேவையான அளவு........ உணவு வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ, அளவில்லாமல் சாப்பிடுவது பலரது வழக்கம். இதனால் கணக்கில்லாமல் அதிக அளவு உணவை உட்கொள்கிறோம். எந்த அளவு உணவு சரியானது என்பதைதெரிந்து கொண்டு, அந்த அளவு மட்டுமே சாப்பிட வேண்டும்.

கலோரி உணவுகளுக்கு குட்பை சொல்லிவிடலாம். ஆரோக்கியமான பிஸ்கட் மற்றும் இதர உணவுகள் என்று கூறப்படும் அனைத்தும் அப்படி இருப்பதில்லை. எந்த அளவு கலோரி இருந்தாலும் அது நம் உடலுக்கு தீமையே. இதை போன்ற உணவுகளை தவிர்க்கவும்.

சாண்ட்விச்...... கடுகு அல்லது கொழுப்பு சத்து இல்லாத மயோனிஸை சாண்ட்விச்சில் தடவி உட்கொண்டால் கலோரி கட்டுப்பாட்டில் இருக்கும். இதனுடன் சேர்ந்து வெட்டிய காய்கறிகளையும் வைத்தால் ருசியுடன் ஆரோக்கியமும் கூடும்.

வார இறுதியில் அதிகமாக உண்ணுவது....... வார நாட்களில் உணவை கட்டுப்பாட்டில் வைத்து விட்டு, வார இறுதியில் உங்கள் கட்டுப்பாட்டை தளர்த்தி விடுகிறீர்களா? அப்படிச் செய்தால் வாரம் முழுவதும் கடைபிடித்த கட்டுப்பாடு வீணாகப் போய் விடும். இதனை தவிர்க்க தினமும் சிறிதளவு கட்டுப்பாட்டில் இருந்து தளர்த்திகொள்ளலாம்.

செயற்கை இனிப்பு...... செயற்கை இனிப்பு என்பது இயற்கை சர்க்கரையை விட 7000 மடங்கு அதிக சுவை நிறைந்தது. இது உங்கள் சுவை உணர்ச்சியை மங்கச் செய்யும் திறன் உள்ளது. செயற்கை இனிப்பு நமக்கு தெரியாமல் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு தானியங்கள், புரதச்சத்து உள்ள பொருட்கள், சுவைச்சாறு, ஏன் குழந்தையின் உணவு பொருட்களில் கூட இருக்கிறது.

கீழ்கண்ட திறவுச்சொல் நீங்கள் வாங்கும் உணவு பொருளின் லேபிலில் இருக்கிறதா என்பதை சரி பாருங்கள்: சக்கரின், அஸ்பர் டேம் , சுக்ரலோஸ், நியோ டேம், ஏஸ்சுல்பேம்.

உணவு பாக்கெட்.......... உணவு பாக்கெட்டில் இருந்து அப்படியே உண்ணுவது என்பது பெரிய ஆபத்து. ஏனென்றால் நாம்எவ்வளவு சாப்பிடுகிறோம் என்ற கணக்கு தெரியாமல் அதிகமாக சாப்பிட்டு விடுவோம். பாக்கெட்டுடன் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

மற்றவர்களிடம் சேர்ந்து உண்ணுதல்......... உதாரணத்திற்கு ஒருவரோடு சேர்ந்து சாப்பிட்டால், எப்போதும் சாப்பிடுவதை விட 35% அதிகமாக சாப்பிடுவோம். நான்கு பேருடன் சாப்பிட்டால் 75% அதிகமாக சாப்பிடுவோம்.

இதுவே ஏழுஅல்லது அதற்கு மேல் உள்ளவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டால், தனியாக சாப்பிடுவதை விட 96% அதிகமாக சாப்பிடுவோம். இதில் இருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், கவனமாக இல்லையென்றால் ஒரு வருடத்திற்கு 72,000 கலோரிகளை அதிகமாக உட்கொள்கிறோம். இது கிட்டத்தட்ட 9 கிலோ எடையை கூட்டும். எனவே அளவாக உண்போம், ஆரோக்கியமாக வாழ்வோம்!

பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்க

பிரசவத்திற்கு முன்பை விட, பிரசவத்திற்கு பின் தான் பெண்களின் உடல் எடை அதிகரிக்கும். அதிகமாக உடல் எடை மேலும் அதிகரிக்காமல் இருக்க வேண்டுமெனில், ஒரு சிலவற்றை மட்டும் மனதில் கொண்டு நடந்தால் போதும்.

உடல் எடை அதிகரிக்காமல் இருக்க, பிரசவத்திற்கு பின்னர் கடுமையான டயட்டை மேற்கொள்ளக்கூடாது. ஏனெனில் இந்த நேரத்தில் பெண்களின் உடலில் போதிய சத்துக்கள் இருக்காது. குறிப்பாக சிசேரியன் பிரசவம் நடந்தவர்கள், குறைந்தது 2-3 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும். ஏனெனில் தையல் ஆறுவதற்கு சிறிது நாட்கள் ஆகும்.

ஆகவே பிரசவத்திற்கு பின், உடல் எடையை குறைப்பதற்கு முன், மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். பிரசவத்திற்கு பின் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க இந்த வழிகளை பின்பற்ற நிச்சயம் உடல் எடை குறைந்து, பிரசவத்திற்கு பின்னும் சிக்கென்று அழகாக இருக்கலாம்.

கடுமையான உடற்பயிற்சிகளை செய்தால் மட்டும் தான் உடல் எடை குறையும் என்று நினைக்க வேண்டாம். யோகா செய்வதால், மனம் புத்துணர்ச்சி அடையவதோடு, ரிலாக்ஸ் ஆகவும் மாறும். மேலும் யோகா செய்வதால், மன அழுத்தம் மற்றும் சோர்வு நீங்குவதோடு, உடலின் செயல்பாடுகள் முறையாக நடந்து, உடல் எடை குறையவும் உதவியாக இருக்கும்.

பிரசவத்திற்கு பின்னர் வேகமாக உடல் எடை குறைய வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம். ஏனெனில் ஏற்கனவே பிரசவத்தின் போது நிறைய சத்துக்கள் உடலில் இருந்து வெளியேறி இருப்பதால், போதிய சத்துக்களை உட்கொண்டு, பொறுமையாக எடையை குறைக்க வேண்டும். அதற்கு பின்வரும் டயட்டுகளை மேற்கொள்ளுங்கள்.

உடல் எடையை குறைக்க நினைக்கும் போது செய்ய வேண்டிய செயல்களில் முக்கியமானவை தண்ணீரை அதிகம் குடிப்பது தான். இதனால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, உடல் வறட்சி தடுக்கப்பட்டு, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கப்படும்.

நல்ல கொழுப்புக்களான மோனோ மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதிலும் அவகேடோ, ஆலிவ் ஆயில், சால்மன் மீன் மற்றும் ஆளி விதைகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான பசலைக் கீரையை பிரசவத்திற்கு பின் பெண்கள் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் கிடைப்பதோடு, உடல் எடை அதிகரிக்காமலும் தடுக்கும்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் நிச்சயம் இரும்புச்சத்து மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளான பால் பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டும். அதிலும் பிரசவத்திற்கு பின்னர் பெண்கள் பாலை அதிகம் பருக வேண்டும். குறிப்பாக ஸ்கிம்ட் மில்க் குடித்தால், எடை குறைவதோடு, உடலுக்கு கால்சியம் சத்தும் கிடைக்கும்.

எலுமிச்சை உடல் எடையை குறைக்க மட்டுமின்றி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவியாக இருக்கும். அதற்கு வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை கலந்து, தேன் சேர்த்து வெறும் வயிற்றில் காலையில் குடித்தால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் அனைத்தும் கரைத்துவிடும்.

பெர்ரிப் பழங்களில், உடல் எடையை குறைக்க உதவும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. ஆகவே பிரசவத்திற்கு பின்னர், உடல் எடையை குறைக்க நினைப்போர் பெர்ரிப் பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

உடல் எடையை குறைக்க நினைக்கும் போது, கடுமையான டயட்டை மேற்கொள்ளாமல், பின்வரும் செயல்களை பின்பற்றினால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதோடு, உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.