எலுமிச்சைப் பழத்தைத் தேய்த்துக் குளிப்பதால், மிக புத்துணர்ச்சியாக இருப்பதோடு, சோப்புப் பயன்படுத்திக் குளிக்கும் குளியலைவிட மிகச் சிறப்பானதாக இருக்கும். முக்கியமாக, நீச்சல் குளத்தில் குளோரின் கலந்த நீரில் நீந்திக் குளித்த பிறகு, இவ்வாறு எலுமிச்சைப் பழம் தேய்த்துக் குளிப்பது தோலுக்கு மிகவும் நன்மை பயப்பதாகும்.
இந்த அமிலம் கலந்த பழச்சாறு குளியல், தோலிலுள்ள மயிர்க்கால்களை மிருதுவாக்குவதோடு, தோலிலுள்ள வேதிப்பொருள்களையும் நீக்கி, தோலுக்குப் புத்துணர்வையும், மென்மையையும் அளிக்கிறது. எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது.
கோடை காலம் தொடங்கி விட்டது. இந்த வெயிலை சமாளிக்க அனைவரும் தினமும் எலுமிச்சை குளியலை எடுத்துக்கொண்டால் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். நாம் குளிக்கும் நீரில் ஒரு எலுமிச்சை பழத்தை பிழியவும். பின்னர் இந்த நீரை கொண்டு குளித்து வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சியும் ஏற்படும்.
மேலும் கோடை காலத்தில் உடலில் இருந்து வரும் வேர்வை நாற்றம் வராது. எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி எடுத்து அதை முகம், உடல் மற்றும் கூந்தலுக்கு தேய்க்கவும். முகத்தில் தேய்க்கும் போது கண்களில் படாமல் பார்த்துக் கொள்ளவும். 5 நிமிடம் கழித்து குளிக்கவும்.
நேரம் அதிகமாக இருக்கும் போது இந்த முறையில் குளிக்கலாம். இந்த எலுமிச்சை குளியல் உடலுக்கும், மனதிற்கும் மிகவும் புத்துணர்ச்சி தரக்கூடியது. எலுமிச்சைப் பழச்சாறு கண்களில் பட்டு விடாமல் பார்த்துக் கொள்ளவும்.
சிலருக்கு சாறிலுள்ள அமிலத்தன்மை உடலுக்கு உகந்ததாக இருக்காது. உடலில் மென்மையான பாகங்களில் பட்டு சில நிமிடங்கள் வரை அதிக எரிச்சலை நீங்கள் உணர்வதாக இருந்தால், எதிர்காலத்தில் இக்குளியலைத் தவிர்த்து விடுவது நல்லது.