_ பொதுவாக தக்காளியைப் சமைக்காமல் பச்சையாகச் சாப்பிடுவதால் இதன் முழுப்பலனையும் பெற முடிகிறது. அப்படிச் சாப்பிடுவது உடலுக்குப் நல்ல பலனை தரும்.
_உடல் பலவீனமாக இருக்கிறவர்களுக்கு இது மிக சிறந்த டானிக் போன்றது.
_இதில் வைட்டமின் ஏ,வைட்டமின் பி-1, பி-2, வைட்டமின் சி, மற்றும் சுண்ணாம்புச்சத்தும் அடங்கி உள்ளன. தக்காளியை எந்த விதத்தில் சாப்பிட்டாலும் அதன் சத்துக்கள் அனைத்தும் குறையாமல் நமக்குக் கிடைக்கும்.
_இதை காலையிலும், மாலையிலும் சூப் செய்து சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் வராது என்பதை விட, தோலைப் பளபளப்பாக வைத்திருக்கும் குணம் இதற்கு அதிகம் உண்டு.
_தக்காளியை சாப்பிடும் முன்பு கண்டிப்பாக சத்தம் செய்ய மறக்காதீர்கள். நமது உடலில் ரத்த உற்பத்திக்குப் இது பயன்படுவதோடு மட்டுமின்றி, ரத்தத்தைச் சுத்திகாரிப்பதற்கும், சீரான ரத்த ஓட்டத்திற்கும் இது மிகவும் பயன்படுகிறது.
_அன்றாடம் நமது உணவில் தக்காளியை தொடர்ந்து சேர்த்து வந்தால் அதன் நன்மைகள் அனைத்தையும் பெற்று ஆரோக்கியமாக வாழலாம். அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு மிகவும் நல்லது.
_பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது.
