முகத்திற்கான எளிய அழகு குறிப்புகள்

 முகம் பளபளப்புடன் திகழவும், சுருக்கமின்றி இருக்கவும் வீட்டிலேயே உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் சில வழிமுறைகள்.....  


* தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன் கேரட்சாறு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டா ஒரு ஸ்பூன்  இது எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விடவும். முகம் பளப்பளப்பாக இருக்கும்.  

* பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள் கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும். ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு ஒருஸ்பூன் பாதாம் எண்ணை ஒரு ஸ்பூன் எல்லாவற்றையும் நன்றாக கலக்கி முகத்தில் பூசி, மசாஜ் செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும். இரவு படுக்கப் போகும் முன்பு புதினா சாறை முகத்தில் பூசி, மறுநாள் காலையில் முகம் கழுவி வரவும்.  

* வெள்ளரிக்காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு நன்கு அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணை வழியாமல் இருக்கும்,முகத்தில் இருக்கும் புள்ளிகள் கருப்பு நிற மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.  

* நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ செய்யவும். அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலம்பவும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.  

* கிளிசரினும், தேனும் கலந்து ரிங்கிள்ஸ் இருக்கும் இடத்தில் தடவி, கொஞ்ச நேரம் மசாஜ் செய்து இரவு முழுவதும் விட்டு விட்டு காலையில் அலம்பவும். முகம் இளமையும், வசீகரமாக மாறும்..  

* ஒரு ஸ்பூன் தேனில் கால் ஸ்பூன் கேரட் சாறு கலக்கவும். அதை கழுத்தை சுற்றிலும் முகத்திலும் போட்டு ஒரு 15-20 நிமிடம் அப்படியே காயவிடவும். கொஞ்சம் வெந்நீரில் ஒருதுளி சோடா உப்பை போட்டு அந்தத் தண்ணீரில் பஞ்சை நனைத்து முகத்தை நன்றாகத் துடைக்கவும்.

வாரத்தில் இரண்டு, மூன்று தடவை இப்படி செய்து வந்தால் நல்ல பலன்கிடைக்கும். சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்.  

* பப்பாளிப்பழ சாற்றுடன் பால் மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட் போல் கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்  

* ஒரு ஸ்பூன் துளசி இலையின் சாற்றுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தோல் பளபளப்பாக மாறும்.

வாட்ச் பராமரிக்கும் முறைகள்

 தற்போது இளையதலைமுறையினர் அனைவரும் விதவிதமான வாட்ச் அணிய விரும்பம் உள்ளவர்களாக உள்ளனர். அதுவும் பெண்கள் சேலை, சுடிதார், பட்டுசேலைக்கு மேட்சாக வாட்ச் அணியும் கிரேஸ் உள்ளவர்களாக இருக்கின்றனர். லெதர், மெட்டல், கோல்ட் என பல மாடல்கள் வைத்திருப்பார்கள்.


ஆனால் அவர்கள் எல்லாமே தினமும் உபயோகிப்பதில்லை. சிலவாட்ச்கள் பீரோவில் தூங்கும். அப்படி ரொம்பநாள் கழித்து எடுத்து பார்க்கும் போது பேட்டரி போய் விடும். இல்லை கருத்துவிடும். நிறைய நாட்கள் உபயோகிக்காமல் வைத்திருக்கும் வாட்சின் பேட்டரி போகாமல் இருக்க வாட்சில் டைம் செட் செய்யும் ஸ்க்ரு இருக்கும்.

அதை லேசாக இழுத்து விட்டால் மணி ஓடாமல் நின்றுவிடும். அப்படியே பீரோவில் வைத்து விட்டு பின்னர் நாம் எடுத்து பயன்படுத்தும் போது அந்த ஸ்க்ரூவை அழுத்தி விட்டு டைம் செட்செய்து போட்டுகொள்ளலாம். இவ்வாறு செய்தால் வாட்ச் நிறைய நாட்கள் பழுதாகாமல் இருக்கும்.

செண்ட் போன்ற வாசனை திரவியங்கள் வாட்சில் பட்டால் கருத்து வெளுத்து போய்விடும். எனவே வாட்சை எல்லா பொருட்களுடனும் போட்டு வைக்காமல் தனியாக அதற்குறிய பாக்ஸிலோ அல்லது டிஷு பேப்பரில் சுருட்டியோ வைத்தால் கருக்காமல் ரொம்ப நாட்களுக்கு நன்றாக இருக்கும்.

மூக்கின் அழகை மறைக்கும் தழும்பை போக்க டிப்ஸ்...

 தற்போது கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.  தொடர்ச்சியாக கண்ணாடியை அணிபவர்களுக்கு, மூக்கின் மேல் தழும்புகள் போன்று கருப்பாக காணப்படும். இத்தகைய தழும்புகள் ஏற்படுவதற்கு காரணம் கனமான கண்ணாடி மற்றும் மூக்கினை அழுத்தும் படியாக நீண்ட நேரம் கண்ணாடி அணிவது தான்.


இது முகத்தில் ஒருவிதமான அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும்.  கண்ணாடி அணிவதால் ஏற்படும் தழும்புகளை போக்குவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

• தினமும் முகத்தை ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவி, மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இவ்வாறு தினமும் 3 முறை செய்து வந்தால், அத்தகைய கருப்பான தழும்புகளை படிப்படியாக மறைவதை காணலாம்..

• உருளைக்கிழங்கை தழும்புள்ள இடத்தில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்து வந்தால், கண்ணாடியால் ஏற்படும் தழும்புகளை மறையும்.இவ்வாறு வாரம் 4 நாட்கள் செய்ய வேண்டும்.

• எலுமிச்சை சாறும் கருமையான தழும்புகளை போக்க வல்லது.  எலுமிச்சை சாற்றினை பஞ்சில் நனைத்து, தழும்புகள் உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். அதன் பின்னர் மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கருமை நிறம் மறையும்.

• கற்றாழை ஜெல்லும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை போக்குவதற்கு சிறந்த பொருள். ஏனெனில் அதிலும் கிளின்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே இதுவும் தழும்புகள் மற்றும் வடுக்களை போக்குவதற்கு வல்லது.

குங்குமப் பூவின் அழகு குறிப்புகள்

விலை சற்று அதிகமாக இருந்தாலும் மேனி அழகைக் கூட்டுவதில் குங்குமப் பூவுக்கு இணை குங்குமப் பூதான். இதோ சில குங்குமப் பூ அழகு குறிப்புகள்…

- குங்குமப் பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டுக் கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர, முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் படிப்படியாக குறைவதை காணலாம். இவ்வாறு வாரம் இரு முறை தொடர்ந்து செய்து வர வேண்டும்.

- குங்குமப் பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்குமப் பூவின் நிறம் முழுக்க நீரில் இறங்கியதும் சிறிது வெண்ணெய் கலந்து நன்றாக குழைத்து இந்த கலவையை உதட்டில் தொடர்ந்து சில நாட்களுக்கு பூசி வந்தால், உதடுகள் செவ்வாழை நிறம் போல மாறுவதை காணலாம். இதழ்களின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும்.முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் மறைந்து விடும்.

- நகச்சுத்தி வந்து பாதிக்கப்பட்ட நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றறில் குங்குமப் பூ-வெண்ணை கலவையை போட்டு வந்தால் நகங்களை சீர்படுத்தி இழந்த அழகை மீண்டும் பெறலாம்

- ஒருவரது முகத்திற்கு வசீகரத்தைத் தருவது கவர்ச்சி மிகுந்த கண்கள்தான். அப்படிப்பட்ட கவர்ச்சியான கண்களுக்கு `பளிச்’ அழகைத் தருவது அடர்த்தியான இமைகள். உங்களின் இமைகள் எழில் பெற இந்தக் குங்குமப் பூ கலவையை அடிக்கடி பூசி வந்தால் பலன் கிடைப்பது உறுதி.

 

கைகளுக்கு முக்கியத்தும் கொடுங்க

 கைகள் பராமரிப்பிற்கு அவ்வளவாக யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பெண்கள் பாத்திரங்கள் கழுவுதல், துணி துவைத்தல் உட்பட பல வேலைகளை செய்கிறார்கள். ஆனால் அதன் பின் கைகளுக்கு சன்ஸ்கிரீன் போன்றவற்றை உபயோகிக்க தவறி விடுகிறோம்.


இதன் விளைவாக, கைகளில் வறட்சி, அரிப்பு, வெடிப்பு, ஏற்படுகின்றன. முகத்தில் காணப்படும் தோலைப் போலவே, கைகளின் பின்புறம் காணப்படும் தோலும் மிகவும் மென்மையானது. எனவே, முகத்தைப் போலவே, கைகளுக்கும் அதிக கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டும்.

குறிப்பாக, கைகளில் ஏற்படும் ஈரப்பதம் இழப்பை ஈடு செய்ய, மாய்ச்சரைசர் கிரீம் போன்றவற்றை பயன்படுத்துவதோடு, ரசாயனங்கள் நேரடியாக கைகளில் படுவதையும் தவிர்க்க வேண்டும்.இதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. சில எளிய வழிமுறைகளை பின்பற்றிவந்தால் உங்கள் கைகள் பார்க்க அழகாகவும், மென்மையாகவும் மாறுவதை காணலாம். அவை என்னவென்று பார்க்கலாம்.....

வாரம் ஒரு முறை வெது வெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து அதில் கைகளை மூழ்குமாறு, 20 நிமிடங்கள் வைத்திருந்த பின்னர் கைகளை நன்றாக துடைத்துவிட்டு, கைகளுக்கான கிரீம் தடவ வேண்டும். இது கைகளின் தோலுக்கு ஊட்டமளிக்கும்.

கைகளின் தோல் வறட்சி உடையவர்கள் கைகளை கழுவிய பின், ஹேண்ட் கிரீமை அடர்த்தியாக, தடவ வேண்டும். பின், அதன் மேல் மெல்லிய துணியை போர்த்தி, சூடான பாரபின் மெழுகை ஊற்ற வேண்டும். பாரபின் மெழுகின் சூட்டால், ரத்த ஓட்டம் அதிகரித்து, தோலில் காணப்படும் துளைகள் விரிந்து ஹேண்ட் கிரீம் சிறப்பாக உறிஞ்சப்படும்.

குளிர் காலங்களில் கைகளுக்கு கம்பளி உறைகள் அணிந்து, கைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வயதாவதால், தோலில் சுருக்கம் மற்றும் கோடுகள் போன்றவை ஏற்படும்.

சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் நேரடியாக தோலில்படுவதால், விரைவிலேயே வயதான தோற்றம் ஏற்படுகிறது. இவற்றில் இருந்து சன்ஸ்கிரீன்கள் பாதுகாப்பு அளிக்கின்றன. எனவே, தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால், இவை, தடுக்கப்படும்.

இளநரையை போக்க வழிகள்

 உடம்பில் அதிக அளவில் பித்தம் கூடினால் தலை முடி நரைக்கும். சமச்சீரற்ற உணவுமுறை, ௭ண்ணெய் வைக்காமல் தலை சீவுவது, ரசாயனப்பொருட்கள் அடங்கிய ஷாம்போ, சோப்பு உபயோகிப்பது போன்றவைகளினாலும் தலைமுடி வெள்ளையாகிறது.


இன்றைக்கு 15 வயது முதலே ஆண், பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. இளநரையை போக்க நம் வீட்டிலேயே மருந்திருக்கிறது. அவை என்னவென்று பார்க்கலாம்.

- பசு மோர் இளநரையை போக்கும் அருமருந்து. வாரம் இருமுறை மோர் தலைக்கு தேய்த்து குளிக்கலாம் உஷ்ணம் நீங்கும்.

- தேங்காய் ௭ண்ணெயை காய்ச்சி அதில் கறிவேப்பிலை போட்டு வேகவைக்கவும். இந்த ௭ண்ணெய்யை தினசரி தலைக்கு தேய்த்து வர கூந்தல் இயற்கை நிறத்திற்கு மாறும்.

- உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும் இது பித்தத்தை குறைக்கும். அதேபோல் முசுமுசுக்கை இலையின் சாறு ௭டுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த ௭ண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநறை படிப்படியாக மாறுவதை காணலாம்.

- இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். அதை சுத்தமான தேனுடன் சேர்த்து ஊறவைத்து தினசரி காலையில் அதை சாப்பிட்டு வர பித்தம் தணியும் இளநரை தானாகவே மாறும்.

- தேங்காய் ௭ண்ணெயில் ௭லுமிச்சை சாறு கலந்து மசாஜ் செய்யவும். இதனால் இளநரை தானாகவே மாறும். கூந்தல் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாறும்.

சுருட்டை முடியை பராமரிக்க

 ஒரு சிலருக்குதான் இயற்கையிலேயே கருமையான சுருட்டை, சுருட்டையாக கூந்தல் அமையும். இது கூந்தலின் அடர்த்தியையும், பெண்களின் அழகையும் அதிகரித்துக் காட்டும். ஆனால் சுருட்டை முடியை பராமரிப்பு மிகவும் கடினம். சுருட்டை முடியை பராமரிக்க சில ஆலோசனைகளை இதோ.


• சுருட்டை கூந்தல் உடைந்து உதிர்வதை தடுக்க வாரம் ஒருமுறை அதற்கு தனியான சிகிச்சை அளிப்பது நல்லது.ஒரு கிண்ணத்தில் வெண்ணெய் எடுத்துக்கொண்டு கூந்தலை நன்றாக விரித்து விட்டுக் கொள்ளவும். வெண்ணையை விரலில் எடுத்து கூந்தலின் வேர்கள் வரை படுமாறு தேய்த்து நன்கு மசாஜ் செய்து 30 நிமிடம் ஊறவைக்கவும். கூந்தலை கழுவி விடவும். இவ்வாறு செய்து வந்தால் கூந்தல் உடைந்து உதிர்வது குறையும்.

• சுருட்டை முடி உள்ளவர்கள் சரியான ஷாம்பு, கண்டிசனரை பயன்படுத்துவது அவசியம். நார்மலான, நேரான கூந்தல் உள்ளவர்களுக்கு பயன்படுத்தும் ஷாம்பு, கண்டீசனரையே பயன்படுத்தக்கூடாது.

• தினசரி தலைக்கு குளித்தால் இயற்கையிலே கூந்தலில் உள்ள எண்ணெய் தன்மையை இழந்து விடும். இதனால் தலைமுடி வறண்டு ஆரோக்கியம் பாதிக்கப்படும். குறிப்பாக சுருட்டை முடிக்கு அதிக எண்ணெய் தன்மை தேவை. அதிலும் தினசரி தலைக்கு குளிப்பதன் மூலம் கூந்தல் சிக்கல் ஏற்படுவது அதிகமாகும்.

• சுருட்டை கூந்தல் உடையவர்கள் பெரிய பற்களை உடைய சீப்பில்தான் சீவவேண்டும். அப்பொழுதுதான் எளிதாக சிக்கல் எடுக்க முடியும்.

• தலைக்கு குளித்து விட்டு அதிகநேரம் தலையில் டவல் கட்டியிருக்க வேண்டாம். இவ்வாறு செய்வதால் ஈரப்பதம் உறிஞ்சப்படுவதோடு கூந்தல் அதிகம் வறண்டு உதிர வாய்ப்புள்ளது.

அழகான உதடு வேண்டுமா?

 


முகத்தை அழகாய்க் காட்டி, வனப்பைக் கூட்டுவதில் உதட்டுக்கு முக்கியப் பங்கு உண்டு. உதடுகளில் வறட்சி, கருத்துப் போதல், ஈரப்பசை இன்மை போன்ற காரணங்களால் உதட்டின் அழகு கெடும். தரமற்ற லிப்ஸ்டிக் பயன்படுத்தும்போது தோல் கருப்பாக வாய்ப்பு அதிகம் உள்ளது.

வேதிப்பொருட்கள் கலந்த பழச்சாறு குடிப்பதாலும் சில வகைப் பழங்கள், கொட்டைகளின் சாறு உதட்டில் படுவதாலும் வைட்டமின் பி குறைபாட்டினாலும் உதடு புண்ணாகி, அந்த இடம் கருத்துப் போகலாம். புண் இருந்தால், தினமும் தேங்காய் எண்ணெய் தடவினால் புண்கள் விரைவாக ஆறும்.

பல் துலக்கும்போதும், முகத்துக்கு ஸ்க்ரப்பிங் செய்யும்போதும், உதடுகளை லேசாகத் தடவிவிட்டால், உதட்டில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி வழவழப்பாக இருக்கும். பன்னீர் ரோஜாவின் சாறு அல்லது பன்னீரும்கூட உதட்டுக்கு நல்ல நிறம் கொடுக்கும்.

உதட்டு நிறம் மாற தயிர், பாலாடையையும் உபயோகிக்கலாம். உதட்டில் தேன் தடவுவதன் மூலம், வறட்சி நீங்கி, பளிச்சிட வைக்கும். உலர் திராட்சையின் தோலை உரித்து, உதட்டின் மேல் தடவிவர, உதட்டில் பளபளப்புக் கூடும்.

முகத்தில் உள்ள சருமத்துளைகளை போக்க

 சருமப் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று முகத்தில் ஆங்காங்கு காணப்படும் ஓட்டைகள். இவை சருமத்துளைகள் என்று அழைப்போம். சாதாரணமாக இது கண்ணுக்கு தெரியாதவாறு இருக்கும். ஆனால் அத்தகைய சருமத்துளைகளானது கண்ணுக்கு தெரியாத அளவு இருக்கும் வரை ஒரு கவலையும் இல்லை.


அதுவே பெரிய அளவில் உருவாகும் போது முக அழகானது பாதிப்படைகிறது. முகத்திற்கு பயன்படுத்தும் அழகுப் பொருட்கள், அதிகப்படியான எண்ணெய் சருமத்தில் இருக்கும் படியாக வைத்தல், சருமத்தை சரியாக பராமரிக்கால் இருத்தல் போன்ற பல காரணங்களால் சருமத்துளைகள் வருகின்றன.

வயது அதிகரிக்க அதிகரிக்க, தோல்களின் மீட்சி குறைவதால், இந்த துவாரங்கள் பெரிதாகும். முகத்தில் ஏற்படும் துவாரங்கள் கண்டிப்பாக நம்மை பாதிக்கும்.   இத்தகைய பிரச்சினையில் இருந்து சருமத்தை காக்க சில வழிகள் உள்ளன. அவை.....

• தேன், துவாரங்களின் அளவை குறைக்க உதவும். 2-3 டீஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த மூலிகைத் தேனை, முகத்தில் நன்றாக தடவிக் கொண்டு, சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்தப் பின், 10 நிமிடங்கள் காய வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

• ஐஸ் கட்டிகளை ஒரு காட்டன் துணியில் சுருட்டி, முகத்தின் மேல் தேய்ப்பது ஒரு எளிய சிகிச்சை முறையாகும். ஐஸ் கட்டிகள் துவாரங்களை இறுக்கமாக்கும். இதனை தினசரி காலை முகத்தில் தடவ வேண்டும். மேலும் இது சரும மெழுகின் உற்பத்தி அளவை இயல்பு நிலையில் வைத்திருக்க உதவும்.

• 5 ஸ்பூன் தேனையும், 2 ஸ்பூன் ஓட்ஸ் கஞ்சியையும், 2 ஸ்பூன் பால் பொடியுடன் கலந்து இந்த கலவையை சமமாக முகத்தில் தடவி, வட்டமான முறையில் 10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இறுதியில் முகத்தை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். இதனை வாரம் இரண்டு முறை தவறாமல் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

முகத்தில் உள்ள கரும்புள்ளியை நீங்க…

 வீட்டில் உள்ள பொருட்களை வைத்து முகத்தில் வரும் கரும்புள்ளிகளை நீக்க முடியும். இதற்காக அழகு நிலையங்களுக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவை என்னவென்று பார்க்கலாம்..


* உருளைக்கிழங்கை நறுக்கி அதனை முகத்தில் 15 நிமிடம் தேய்த்த பின்னர் காயவைத்து, குளிர்ந்த நீரில் கழுவிடவேண்டும். இதனால் கரும்புள்ளிகள் படிப்படியாக நீங்கிவிடும்.

* வெந்தயக் கீரையை நன்கு அரைத்து பேஸ்ட்செய்து கொள்ளவேண்டும். பின் அதனை முகத்தில் தடவி, சிறிதுநேரம் காயவைத்து, பிறகு கழுவவேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி விடும்.

* கொத்தமல்லியுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து பேஸ்ட்செய்து முகத்தில் தடவி காயவைத்து கழுவ வந்தால் கரும்புள்ளிகள் மறையும். இதை வாரம் இரு முறை செய்யலாம்.

* எலுமிச்சை சாற்றுடன், சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும் இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறி, சருமம் பளிச்சென்று காணப்படும்.

* கரும்புள்ளியை நீக்க சிறந்த ஒரு வீட்டு மருந்து என்னவென்றால் ஓட்ஸை பவுடர்செய்து, ரோஸ் வாட்டருடன் கலந்து முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின்னர் கழுவ வேண்டும்.

* இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் கலந்து, தடவி வந்தால், கரும்புள்ளிகள் சீக்கிரம்போய் விடும்.

* தக்காளியை நன்கு பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், கரும்புள்ளியை நீக்கிவிடலாம்.

* பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து, அதனை முகத்தில் தடவி, 30நிமிடம் ஊறவைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் போய்விடும்.

- மேற்கூறிய டிப்ஸ்களையெல்லாம் செய்துவந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீக்கி, அழகான சுத்தமான சருமத்தை பெறலாம்.

தலை முதல் கால் வரை இயற்கை அழகு குறிப்புகள்

 • வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்தால், கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி, கருவளையங்களும் நீங்கிவிடும்.


• முகத்தை தினமும் நான்கு முதல் ஐந்து முறை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவாக இருக்கும்.

• முகத்தில் உள்ள பருக்களை போக்குவதற்கு வாரம் ஒரு முறை பெண்கள் ஆவிப் பிடித்தால், பருக்கள் வராமல் தடுக்கலாம்.

•  முகத்தை பளிச்சென்று பொலிவுற வைக்க மாம்பழம், பப்பாளி, எலுமிச்சை, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை மிகவும் சிறந்த பழங்கள். கடைகளில் விற்கும் ஃபேஸ் மாஸ்க்குகளை போடுவதற்கு பதிலாக, இந்த பழங்களை கொண்டு  மாஸ்க் போட்டு வந்தால் முகம் பொலிவுறும்.

• தேங்காய் எண்ணெய் வெதுவெதுப்பான சூடேற்றி, தலைக்கு தடவி நன்கு 20 நிமிடம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு, அடர்த்தியாகவும் வளரும். குறிப்பாக இரவில் தலைக்கு மசாஜ் செய்துவிட்டு, காலையில் குளிப்பது நல்ல பலனை தரும்.

• சருமத்திற்கு க்ரீம்கள் மற்றும் லோசன்கள் பயன்படுத்துவதற்கு, பதிலாக தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை தடவினால், சருமம் மென்மையாக, ஈரப்பதத்துடன், சுருக்கமின்றி இருக்கும்.

• எலுமிச்சையின் சாற்றினை தயிருடன் சேர்த்து கலந்து, தலைக்கு மசாஜ் செய்து குளித்தால், கூந்தல் சுத்தமாக பொடுகின்றி இருக்கும். மேலும் கூந்தல் உதிர்தலும் தடைபடும்.

• கைகள் மற்றும் கால்களில் வளரும் முடியை எடுப்பதற்கு, வாக்ஸிங் செய்வோம். அவ்வாறு வலியை உண்டாக்கும் வாக்ஸிங்கை செய்வதற்கு பதிலாக, தினமும் காலையில் எழுந்ததும், கைகள் மற்றும் கால்களுக்கு கடுகு எண்ணெய் கொண்டு, மசாஜ் செய்து பின் குளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து தினமும் செய்து வந்தால், கைகள் மென்மையாக, முடியின்றி இருக்கும். 

முகத்திற்கு ஏற்ற கூந்தல் அலங்காரங்கள்

 பெண்கள் தங்களின் முக வடிவங்களுக்கு ஏற்றவகையில் கூந்தல் அலங்காரத்தை தேர்வு செய்வது அவசியம். அந்த வகையில் பெண்களுக்கு உதவும் எளிமையான டிப்ஸ்.....


• நீள்வட்ட முகமுடைய பெண்களுக்கு ஃப்ரீ ஹேர், போனி டைல் போன்ற ஹேர் ஸ்டைல்கள் மிக எடுப்பாக இருக்கும். ஆனால் இவர்கள் தங்களின் தலையில் நடு வாகிடு எடுப்பதை தவிர்த்து விட வேண்டும். இப்படி செய்தால் அவர்களின் முகம் இன்னும் நீளமாக இருப்பது போல தோன்றுவது மட்டுமில்லாமல் அவர்களது மூக்கையும் சற்று பெரியதாக காட்டிவிடும்.

• சதுர முக வடிவமுடையர்கள் என்றால் உங்களக்கு நீளமான கூந்தல் மிக கச்சிதமாக பொருந்தும். கூந்தலை பின்பக்கமாக உயர்த்தி கட்டாமல், முகத்தில் கூந்தலின் இழைகள் விழும்படி பார்த்து கொள்ளுங்கள். குட்டை முடி உள்ளவராக இருந்தால் லேயர் லேயராக பாப் கட் செய்துகொள்ளலாம்.

• வட்ட முகமுடையவர்கள் உங்களின் கன்னங்களில் நிறைய சதை இருந்தால் நீங்கள் உங்களின் தோள்கள் அளவிற்கு முடியை லேயர் கட் செய்து கொள்ளலாம். உங்களுக்கு சுருட்டை முடி இருந்தால் அதை ஸ்ரேட் னிங் செய்யலாம். இப்படி செய்யும்போது உங்களின் முகம் சற்று நீளமாக தோன்றும். எந்த வகையான சிகை அலங்காரம் செய்தாலும் கூந்தலை மேலே தூக்கி சீவுங்கள்.

அழகை காட்டும் ஆடை

 கோடை என்றாலே சுட்டெரிக்கும் வெயிலும், வழியும் வியர்வைதான் நினைவுக்கு வரும். அதனால் சவுகரியமாக இருக்கமுடியாது. விதவிதமாக ஆடைகள் அணியமுடியாது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். உண்மை அதுவல்ல. கோடை காலத்திலும் அழகழகாக ஜொலிக்கும் உடைகளை அணிந்து ஆனந்தமாக வாழலாம்.


பென்சில் ஸ்கர்ட்: இந்த பேஷன் உடைகள் இடையை ‘கொடி இடையாகக்’ காட்டும். உடையில் முக்கியத்துவம் கொடுக்கவிரும்பும் பகுதியில் ‘ஸ்லிட்’ கொடுத்துக் கொள்ளலாம். கையிலோ, இடுப்பிலோ பெரும்பாலானவர்கள் ‘ஸ்லிட்’ கட் கொடுப்பது இப்போது பேஷனாக இருக்கிறது. உடலில் எந்த பகுதி பார்க்க அழகாக இருக்கிறதோ, அந்த பகுதியில் ‘ஸ்லிட்’ கொடுப்பது நல்லது.

பெப்லம்ஸ்: உடலில் பெண்மைத்தன்மையை அதிகரித்துக்காட்ட விரும்புகிற வர்கள் இந்த வகை பேஷனை கோடைக்கு தேர்வு செய்கிறார்கள். இதற்கு கேடியா பிளவுஸ் அணிந்தால் இடுப்புப் பகுதி வளைவு நெளிவுகளை சிறப்பாக்கிக்காட்டும். இதற்கு ஜோடியாக பென்சில் ஸ்கர்ட் அல்லது பிளாசோஸ் வகை பேண்ட் அணியலாம்.

சிம்பிள் ஸ்கர்ட்: கோடைகாலத்தில் விருந்து, விழாக்கள் அதிகம் நடக்கும். அதில் கலந்துகொள்ளும் பெண்கள் இந்த வகை ஆடைகளை அணியலாம். கோடைகாலத்தில் கல்யாண விருந்துகளில் நடனமாட இந்த ஆடை காற்றோட்டமாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும். இந்த வகை ஆடைகளை இளம் பெண்கள் இப்போது அதிக அளவில் வடிவமைத்துக் கேட்கிறார்கள். ‘நியான் கலர்ஸ்’ பெண்களை அதிகம் கவர்கிறது.

சிக்னல் விளக்கு நிறங்களான சிவப்பு, பச்சை, மஞ்சள் ஆகிய அடர் நிறங்களைத்தான் நியான் கலர்ஸ் என்று கூறுகிறோம். இந்த மூன்று வகை நிறங்களில்தான் கைப்பைகள், காலணிகள், வளையல்கள் அதிகம் உருவாகிறது. பெண்களை ஈர்க்கும் இந்த நிறங்களில் தயாராகும் கோடை ஆடைகள் பெண்களை அதிகம் கவர்கிறது.

கீழ் உடை, மேல் உடை என்று தனித்தனியாக இல்லாமல் கவுன்போல் ஒரே உடையாக உருவாக்கப்படும் ஜம் சூட்ஸ், கோடையில் அதிகமான பெண்களால் விரும்பப்படுகிறது. காற்றோட்டமான இந்த ஆடையை   பழைய காலத்தில் கம்பெனி பணியாளர்கள் அணிந்தார்கள். இப்போது அது பெண்கள் விரும்பும் பேஷனாகி இருக்கிறது.

அனிமல் பிரிண்ட்ஸ், ஜங்கிள் பிரிண்ட்ஸ், பூ டிசைன் உடைகளும் கோடையில் புகழ்பெறுகிறது. கோடை காலத்தில் மிருகங்களை பார்க்கச் செல்வது, காட்டுப்பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வது, பூந்தோட்டங்களை கண்டு ரசிப்பது போன்றவைகளில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

அந்த ஆர்வத்தை பயன்படுத்தி அதையே கோடைகால டிசைன்களாக்கி இருக்கிறார்கள். வேட்டி போல் அணியக்கூடிய டோத்தி சல்வார் கோடையில் பெருமளவு பெண்களால் விரும்பப்படுகிறது.

இப்போது இந்தியா முழுவதும் அதிக செல்வாக்கு பெற்றிருப்பது, ‘ட்ரைபல் அசென்ஸ்’ என்ற ஆதிவாசிகள் பேஷன் உடை. ஆதிவாசிகள் தங்கள் பகுதியில் கிடைக்கும் மணிகள், மாலைகள், கண்ணாடிகள், வளையல்களை பயன்படுத்தி இந்த அழ கான உடையை தயாரிப்பார்கள்.

கோடை கால ஆடைகள் தேர்ந்தெடுக்க பெண்களுக்கு டிப்ஸ்...........

காட்டன், ஷிபான், ஜார்ஜெட், லேசஸ் போன்ற துணி வகைகளில் உருவாக்கப்படும் ஆடைகளை வாங்கி அணியுங்கள். அவை அதிக எடை இல்லாமல் காற்றோட்டமாக இருக்கும். முன்பு இள நிறத்திலான கோடை கால உடைகளையே பெண்கள் விரும்பினார்கள்.

இப்போது நியான் கலர்ஸ் உடைகளும் கோடைகால பேஷனாக மாறிவிட்டது. பெர்பியூம் அளவை குறைத்து அதற்கு பதிலாக டியோடரன்ட்டை பயன்படுத்த வேண்டும். வெளியே செல்லும்போது சன் கிளாஸ் அணிந்துகொள்ள வேண்டும்.

காலணிகள் திறந்த நிலையில் இருந்தால் காற்றோட்டம் கிடைக்கும். காலணிகள் மணிகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தால் பார்க்க அழகுதரும். கோடையில் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

கோடைக்கு ஏற்ற ஆடை...

  மனித வாழ்க்கையில் கடந்து வரும் பல்வேறு பருவங்கள் எப்படி தவிர்க்க முடியாததோ அதுபோல் இயற்கையில் மாறிவரும் பருவ காலங்களும் தவிர்க்க முடியாதது. மனித பருவங்களை கொண்டாடுவதுபோல், இயற்கையின் பருவங்களையும் கொண்டாட வேண்டும்.


அந்த வகையில் இப்போது நாம் கொண்டாடுவதற்காக வந்திருக்கிறது, மீண்டும் ஒரு கோடை! “கோடை என்றாலே சுட்டெரிக்கும் வெயிலும், வழியும் வியர்வைதான் நினைவுக்கு வரும். அதனால் சவுகரியமாக இருக்கமுடியாது. விதவிதமாக ஆடைகள் அணியமுடியாது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள்.

உண்மை அதுவல்ல. கோடை காலத்திலும் அழகழகாக ஜொலிக்கும் உடைகளை அணிந்து ஆனந்தமாக வாழலாம். “கோடை என்றாலே காட்டன் ஆடைகளைத்தான் அணியவேண்டும் என்ற நிலையில் இருந்து மக்கள் மாறிவிட்டார்கள். ‘இந்த சம்மருக்கு புதிதாய் என்ன வந்திருக்கிறது’ என்று புதுப்புது பேஷன் உடைகளை தேடத் தொடங்கியிருக்கிறார்கள்.

அவர்களது ஆசையை புரிந்துகொண்ட டிசைனர்கள் விதவிதமாக கோடைக்கால ஆடைகளை வடிவமைத்து நகரத்திற்கு நகரம், பேஷன் ஷோ நடத்தி வெளியிட்டுக்கொண்றார்கள். இந்த கோடையில் பெண்கள் விரும்பும் சில வகை பேஷன் உடைகள் இதோ...

மோனோ குரோமேட்டிக் ஆடை:.............பொதுவாக கோடை காலத்திற்கு ஏற்றது, வெள்ளை நிறம் என்பார்கள். அது சூரிய வெப்பத்தை வெளித்தள்ளும். கறுப்பு நிறம் வெப்பத்தை உள்வாங்கும். அதனால் அது கோடைக்கு பொருத்தமற்றது என் பார்கள். இந்த மோனோ குரோமேட்டிக் ஆடைகள் கறுப்பும், வெள்ளையும் கலந்த கலவை.

பொதுவாக கட்டம்போட்ட ‘செக்’ ஆடைகளுக்கு சம்மரில் அதிக மவுசு ஏற்படும். அதை ஈடுசெய்யும் விதத்தில் இந்த கோடைக்கு பிளாக் அண்ட் ஒயிட் செக் உடைகள் பேஷனாகி இருக்கிறது. பெண்கள் அதிக அளவில் இதை விரும்புகிறார்கள்.

ஸ்டிரைப்ஸ்: இந்த வார்த்தைக்கு பல்வேறு நிறத்திலான கோடுகள், நீண்டு குறுகிய கோடுகள் என்று அர்த்தம். இந்த ஆடைகளும் கோடுகளால் நிரம்பியது. நம் நாட்டில் இப்போது பெண்கள் உடல் பருத்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த வகை நேர் கோடு உடைகள் அவர்களை ஓரளவு கச்சிதமாக காட்டுவதால், ‘ஸ்டிரைப்ஸ்’க்கு மவுசு அதிகரித்திருக்கிறது.

குள்ளமாக இருப்பவர்களும் ‘நேர் கோடு’ ஆடைகளை கோடைக்கு தேர்வு செய்கிறார்கள். ஒல்லியாக இருப்பவர்கள் குறுக்கு கோடு கொண்ட ஆடைகளையும், கச்சிதமான உடல் வாகுவைக்கொண்ட பெண்கள் ஏற்ற- இறக்கமான கோடுகளைக் கொண்ட ஆடைகளையும் கோடைக்கு தேர்வு செய்கிறார்கள்.

கலர் பிரேக்: ‘இந்த கலருக்கு இந்த கலர்தான் பொருத்தமாக இருக்கும்’ என்ற பொதுவாக கருத்து நிலவிக்கொண்டிருக்கிறது. அப்படியல்ல, அதற்கு நேர் எதிரான கலரைக்கூட அணிந்து ஜமாய்க்கலாம் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது, இந்த ‘கலர் பிரேக்’ பேஷன்.

இதில் இருக்கும் சிறப்பு என்னவென்றால், கட்டமைப்பான உடல்வாகு இல்லாதவர்களையும், அந்த குறைபாடு தெரியாத அளவிற்கு இந்த வகை ஆடைகள் நேர்த்தியாகக்காட்டும். ஆப்பிள் வகை உடல்வாகு கொண்ட பெண்களின் உடலின் மேல் பகுதி குண்டாகவும், கீழ்ப்பகுதி ஒல்லியாகவும் இருக்கும்.

அவர்கள் தங்களுக்கான கோடைகால உடைகளைத் தேர்ந்தெடுக்கும்போது மேல் பகுதி ஆடை அடர்த்தியான நிறத்திலும், கீழ்ப்பகுதி ஆடை இளநிறத்தில் இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க ஸ்கரப்

 பெண்களின் முகத்தில் தோன்றும் தேவையற்ற ரோமங்கள் அவர்களின் அழகையே கெடுத்துவிடும். இத்தகைய ரோமங்களை போக்குவதற்கு பெண்கள் நிறைய வழிகளை பின்பற்றி வந்தாலும், அவற்றில் பெரும்பாலான முறைகள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுவதில்லை என்பதே உண்மை.


உடலில் உள்ள ஹார்மோன் மாற்றங்களினால் சில பெண்களுக்கு அதிகமான ரோம வளர்ச்சி ஏற்படும். பெரும்பாலும் உதட்டுக்கு மேல், காதுகளுக்கு அருகில் மற்றும் தாடை பகுதிகளில் அதிகமாக வளரும் இத்தகைய ரோமைங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவது சற்று கடினம் தான் என்றாலும் முறையான குறிப்புகளை பயன்படுத்தி இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம். முகத்திலிருக்கும் தேவையற்ற ரோமங்களை அகற்ற இதோ சில எளிய டிப்ஸ்...

• சிறிதளவு சக்கரை, எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு கலவையை தயார் செய்து கொள்ளவும். இந்த ஸ்கரப்பை முகத்தில் ரோமங்கள் இருக்கும் இடத்தில் கீழிருந்து மேலாக தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடவும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து செய்து வந்தால், முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சியை தடுக்கலாம். பருக்கள் உள்ளவர்களும் இந்த முறையை பின்பற்றினால் பருக்களை படிப்படியாக மறையும்.

• சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் தூளுடன், தேவையான அளவு பால் சேர்த்து நன்றாக குழைத்து ரோமங்களின் மீது பூசவும். இந்த கலவையை சுமார் ஒரு 10 நிமிடங்களுக்கு முகத்தில் தேய்த்து, காய்ந்த பிறகு கழுவினால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைப்படுவதோடு முகம் பட்டுப்போல் பொலிவடையும். இந்த ஸ்கரப்பை வாரத்திற்கு 3 முறை செய்ய வேண்டும்.

• சிறிதளவு எலுமிச்சை சாறுடன், தேவையான அளவு தேன் சேர்த்து நன்றாக குழைத்துகொள்ளவும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் சுத்தமடைவதோடு, தேவையற்ற ரோமங்களின் வளர்ச்சியும் படிப்படியாக குறையும்.

தலைமுறையினரை கவரும் ஹேர் டை

 நரையை மறைக்க ஹேர் டை என்ற காலம் போய், அழகை மேம்படுத்த ஹேர் டை என்ற காலம் வந்துவிட்டது. இப்போது நம் நாட்டிலும் இளம் தலைமுறையினரிடம் தலைமுடியை டை செய்து கொள்வது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. ஹேர் டை பற்றிய உண்மைகளை அறிந்து கொண்டு செயல்பட்டால் அது உங்கள் தோற்றத்தில் நல்ல மாற்றத்தை உண்டாக்கும்.


நீங்கள் முதல் முறையாக முடியை டை செய்யுமுன் ஒரு அழகு நிலையம் (ப்யூட்டி பார்லர்) சென்று அழகுக் கலை நிபுணரின் ஆலோசனையைப் பெறவும். உங்கள் நிறத்திற்கேற்ற, உங்கள் முடியின் அமைப்புக்குத் தகுந்த நிறம் என்ன என்பது ஒரு அழகுக் கலை நிபுணரால்தான் கூற முடியும்.

அழகு நிலையம் செல்லாமல் நீங்களே முடிவெடுக்க விரும்பினால், உங்கள் முடியின் ஒரு சிறிய பாகத்தை டை செய்து பார்க்கவும். ஹேர் டையின் நிறம் முடிவாகிவிட்டது. வீடோ அல்லது அழகு நிலையமோ, முதலில் ‘அலர்ஜி டெஸ்ட்’ செய்து, நீங்கள் பயன்படுத்த விரும்பும் ஹேர் டை உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்காது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

உங்கள் முடியை முழுவதாக டை செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. தலையின் முன் பக்கத்திலோ பின் பக்கத்திலோ மேலே இருக்கும் சில முடிகளை மட்டும் “ஹை லைட்” செய்யலாம். இதை பராமரிப்பதும் எளிது. டை செய்த முடிக்கு அதிக பராமரிப்பு தேவை என்பதை மறந்து விடாதீர்கள். அதற்கேற்ற ஷாம்பூ, கண்டிஷனர் ஆகியவற்றை உபயோகப்படுத்துங்கள்.

உங்கள் முடியை மருதாணியால் டை செய்திருந்தால், அந்த நிறம் முழுமையாக மாறும் வரை கெமிக்கல் ஹேர் டை உபயோகிப்பதை தவிர்க்கவும். குளித்த பிறகு ஹேர் ட்ரையர் அதிகமாக பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். முடி அதிகமாக சூடானால் உங்கள் டையின் நிறம் மாறி, ஆங்காங்கே வெளுத்து அசிங்கமாகத் தோற்றமளிக்கும்.

நாட்கள் செல்லச் செல்ல உங்கள் முடி வளருவதால், டை செய்த முடியில் புதிதாக வளர்ந்த முடி வித்தியாசமாகத் தோற்றமளிக்கும். அதனால் இரு வாரத்துக்கு ஒரு முறை வளர்ந்த முடியை ‘டச் அப்’ செய்து கொண்டால் அழகாக இருக்கும்.

எண்ணெய்ப் பசை கூந்தல் பராமரிப்பு

 ஒருவரின் கூந்தல் எந்ததன்மையுடையது என்பதை அறிந்து அதற்கேற்ப சில வழி முறைகளை கடை பிடித்தால் பட்டு போன்ற பளபளப்பான கூந்தலை பெறலாம். எண்ணெய்ப் பசை தன்மையுள்ள கூந்தலுக்கான சில வழிகள்.....


தலையில் காணப்படும் எண்ணெய் சுரப்பிகள் அதிகளவில் சுரப்பதால், கூந்தல் எண்ணெய்ப் பசையுடன் காணப்படுகிறது. கூந்தல் எண்ணெய் தன்மையுடன் இருப்பதால், தூசு மற்றும் அழுக்கு போன்றவை எளிதில் சேர்ந்து விடும்.

* எண்ணெய்ப் பசையான கூந்தல் உடையவர்கள், அடிக்கடி தலைக்குக் குளிப்பதோடு, தலையில் தூசு மற்றும் அழுக்கு போன்றவை சேராமல் பராமரிக்க வேண்டும்.

* எண்ணெய்த் தன்மை கூந்தலுடையவ ர்கள் மருதாணி அல்லது எலுமிச்சை போன்ற பொருட்கள் கலந்த ஷாம்புக்களாக வாங்கி பயன்படுத்துவது நல்லது.

* வேப்பிலைச் சாறுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து தலையில் தேய்த்து அரை மணிநேரம் கழித்து குளிக்க, தலையில் அதிகப்படியாக காணப்படும் எண்ணெய் பிசு பிசுப்பு நீங்கும்.

* கேரட்டை வேகவைத்து மசித்து, தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளித்தால், எண்ணெய்பசை கட்டுப்படும். மேலும் எண்ணெய்ப் பசை கூந்தலுடையவர்கள் உணவில் எண்ணெய் பதார்த்தங்களை குறைத்துக் கொள்வது நல்லது.

- இந்த எளிமையான குறிப்புகளை பின்பற்றி உங்களின் கூந்தல் பராமரியுங்கள்.

கண்களின் அழகைப் பராமரிக்க

 நம் அழகை அதிகப்படுத்தி காட்டுவதில் கண்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. உதடுகள் சிரித்தாலும், உள்ளத்தின் சோகத்தைக் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும். சந்தோஷமோ, துக்கமோ எதுவானாலும் அதைக் கண்கள் பிரதிபலித்துவிடும்.


மொத்தத்தில் கண்கள் உங்கள் அழகை தெரிந்து கொள்ள உதவும் கண்ணாடிகள். கண்கள் பளபளப்பாக, புத்துணர்வோடு இருந்தால் தான் அழகு. சோர்ந்து களைத்துப் போன கண்கள் முக அழகையே கெடுத்து விடும்.

உங்கள் கண்களின் அழகை பராமரிக்க சில எளிய வழிமுறைகள்...

• தினசரி எட்டு மணி நேரத் தூக்கம், சத்தான உணவு, கால்சியம், வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் உட்கொள்ள வேண்டும். கண்களின் அழகிற்கு கீழ்க்கண்ட உணவுகள் முக்கியம் பால், பால் உணவுகள், கீரை, முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சி நிறப் பழங்கள் மற்றும் காய்கள் உட்கொள்ள வேண்டும்.

• போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியதும் மிக முக்கியம். உடலுக்கு மட்டுமின்றி கண்களுக்கு பயிற்சி அவசியம். ஏனெனில் கண் தசைகளோடு, மூளையுடன் தொடர்புடைய ஏராளமான நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளன.

• கண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் க்ளாக் வைஸ் மற்றும் ஆன்டிக்ளாக் வைஸ் டைரக்ஷன்களில் மூன்று முறைகள் சுழற்ற வேண்டும். கிட்டத்தில் இருக்கும் பொருளைப் பார்த்து விட்டு, உடனடியாக தொலைவில் உள்ள ஒரு பொருளையும் பார்க்க வேண்டும்.

• கட்டை விரலை நடுவில் வைத்துக் கொண்டு, அதை இடவலமாகவும், வல இடமாகவும் நகர்த்தி, தலையைத் திருப்பாமல் வெறும் பார்வையை மட்டும் திருப்பிப் பார்க்க வேண்டும். நீண்ட நேரம் கம்யூட்டர், மானிட்டர் போன்றவற்றின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், அடிக்கடி ஏதேனும் பச்சை வெளியைப் பார்க்கலாம். கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும் நீலம் மாதிரியான நிறங்களையும் பார்க்கலாம்.

வறண்ட கூந்தல் பொலிவு பெற வழிகள்

 கூந்தல் அதன் தன்மையை பொறுத்து வறண்ட கூந்தல், எண்ணெய் பசையுடைய கூந்தல் என்று பிரிக்கப்படுகிறது. ஒருவரின் கூந்தல் எத்தன்மையுடையது என்பதை அறிந்து அதற்கேற்ப சில வழி முறைகளை கடைபிடித்தால் பட்டு போன்ற பளபளப்பான கூந்தலை பெறலாம். வறண்ட தன்மையுள்ள கூந்தலுக்கான சில டிப்ஸ்கள்..


தலையில் எண்ணெய்ச் சுரப்பிகளின் செயல்பாடு குறைவு காரணமாகவே கூந்தல் வறட்சியடைகிறது. மேலும், அதிகமாக சூரிய கதிர்வீச்சிற்கு உட்படுதல், கடின தன்மையுள்ள ஷாம்புகளை அதிகமாக பயன்படுத்துதல் மற்றும் சில ரசாயன சிகிச்சை போன்றவற்றாலும் கூந்தலில் வறட்சி தன்மை உண்டாகிறது.

* வறண்ட கூந்தலுடையவர்கள் ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி தலையில் தடவி சிறிது நேரம் ஊறவிட்டு தலைக்கு குளிக்க வேண்டும். மேலும் மைல்டான தன்மையுடைய ஷாம்புக்களை பயன்படுத்தினால் கூந்தலின் வறட்சி தன்மை குறையும்.

* விளக்கெண்ணெய், கிளிசரின், வினிகர் ஆகியவற்றை சமஅளவு எடுத்து மிதமான ஷாம்புவுடன் சேர்த்து கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், கூந்தலின் ஆரோக்கியம் பராமரிக்கப்படும்.

* சிலருக்கு ஷாம்பு போட்டு குளிப்பதாலும் கூந்தல் அதிகப்படியாக வறண்டு காணப்படும். அப்படிபட்டவர்கள் தலைக்கு குளித்த பின் சிறிது பாலை தலையில் தேய்த்து நன்கு அலசி விட வேண்டும். இவ்வாறு செய்தால் கூந்தல் பட்டுப் போல மின்னும்.

* வறட்சியான கூந்தலை உடையவர்கள் ஹேர் -டிரையர் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

கோடை கால சரும பாராமரிப்பு

 கோடை காலம் வந்துவிட்டது..சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நமது சருமத்தை பாதுகாத்துக்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்.


நமது வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்தே வெயில் தாக்கத்தால் சருமத்தில் ஏற்பட்ட டானிங், சோர்வு, சரும வறட்சி ஆகியவற்றை தடுத்து, உங்களின் பொலிவை மீட்டெடுக்கலாம்.

• எலுமிச்சை சாறுடன், தேவையான அளவு பன்னீர் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து மை போலக் கலந்துக் கொள்ளுங்கள்.இந்த கலவையை முகத்தில் மாஸ்க் போலப் பூசி 15 நிமிடம் கழித்து கழுவிவிடவும். இவ்வாறு வாரம் இரு முறை செய்தால் வெயிலினால் பாதிப்படைந்த உங்கள் சருமம் பட்டுப்போல் ஜொலிக்கும்.

• கோடை காலத்தில் ஏற்படும் சரும நிற மாற்றத்திற்கு உகந்தது முட்டை மாஸ்க். வெயிலில் இருந்து வீடு திரும்பியதும் உங்கள் முகத்தில் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் மாஸ்க் போல பூசுங்கள். உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால் முட்டையின் வெள்ளை கருவுடன் சிறிது தேன் கலந்துக்கொள்ளலாம். இந்த கலவை உங்கள முகத்தில் இருக்கும் சோர்வை போக்குவதுடன் முகத்தில் இருக்கும் சுருக்கங்களையும் போக்கும்.

• தயிர் உங்களது சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்கும். ஒரு பாத்திரத்தில், தயிர், சிறிதளவு கடலை மாவு அல்லது முல்தானிமட்டி, அரைத்த ஆரஞ்சு தோல் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவவும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் முகம் பொலிவு பெறுவதுடன் சருமத்தில் ஈரப்பதமும் தக்கவைக்கபடும்.

• வெள்ளரிக்காய் சாறை, துருவிய வெள்ளரிக்காயுடன் கலந்து வெயிலினால் பொலிவிழந்த சருமத்தின் மீது பூசினால் சருமம் குளுமை பெறுவதுடன், பிரெஷ்ஷாகவும் இருக்கும்.

• சோற்று கற்றாழையின் சாறை உங்கள் கைகள், பாதங்கள், கழுத்து பகுதி மற்றும் முகத்தில் பூசிக்கொள்ளலாம்.

• சூரிய கதிர்வீச்சால் பெரும்பாலானோருக்கு கண்களை சுற்றி கருவளையம் ஏற்படும். முகத்தின் அழகை பாதிக்கும் இந்த கருவளையங்களை போக்கிட கண்களை மூடிக்கொண்டு உருளை கிழங்கு துண்டுகளை கண்களின் மீது வைக்கலாம். உருளை கிழங்கு சாறையும் கூட கண்களை சுற்றி தடவலாம்.

புத்துணர்ச்சி தரும் எலுமிச்சை குளியல்

 எலுமிச்சைப் பழத்தைத் தேய்த்துக் குளிப்பதால், மிக புத்துணர்ச்சியாக இருப்பதோடு, சோப்புப் பயன்படுத்திக் குளிக்கும் குளியலைவிட மிகச் சிறப்பானதாக இருக்கும். முக்கியமாக, நீச்சல் குளத்தில் குளோரின் கலந்த நீரில் நீந்திக் குளித்த பிறகு, இவ்வாறு எலுமிச்சைப் பழம் தேய்த்துக் குளிப்பது தோலுக்கு மிகவும் நன்மை பயப்பதாகும்.


இந்த அமிலம் கலந்த பழச்சாறு குளியல், தோலிலுள்ள மயிர்க்கால்களை மிருதுவாக்குவதோடு, தோலிலுள்ள வேதிப்பொருள்களையும் நீக்கி, தோலுக்குப் புத்துணர்வையும், மென்மையையும் அளிக்கிறது. எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது.

கோடை காலம் தொடங்கி விட்டது. இந்த வெயிலை சமாளிக்க அனைவரும் தினமும் எலுமிச்சை குளியலை எடுத்துக்கொண்டால் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். நாம் குளிக்கும் நீரில் ஒரு எலுமிச்சை பழத்தை பிழியவும். பின்னர் இந்த நீரை கொண்டு குளித்து வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சியும் ஏற்படும்.

மேலும் கோடை காலத்தில் உடலில் இருந்து வரும் வேர்வை நாற்றம் வராது. எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி எடுத்து அதை முகம், உடல் மற்றும் கூந்தலுக்கு தேய்க்கவும். முகத்தில் தேய்க்கும் போது கண்களில் படாமல் பார்த்துக் கொள்ளவும். 5 நிமிடம் கழித்து குளிக்கவும்.

நேரம் அதிகமாக இருக்கும் போது இந்த முறையில் குளிக்கலாம். இந்த எலுமிச்சை குளியல் உடலுக்கும், மனதிற்கும் மிகவும் புத்துணர்ச்சி தரக்கூடியது. எலுமிச்சைப் பழச்சாறு கண்களில் பட்டு விடாமல் பார்த்துக் கொள்ளவும்.

சிலருக்கு சாறிலுள்ள அமிலத்தன்மை உடலுக்கு உகந்ததாக இருக்காது. உடலில் மென்மையான பாகங்களில் பட்டு சில நிமிடங்கள் வரை அதிக எரிச்சலை நீங்கள் உணர்வதாக இருந்தால், எதிர்காலத்தில் இக்குளியலைத் தவிர்த்து விடுவது நல்லது.

எப்பொழுதும் பெண்களிடம் இருக்கும் மேக்கப் பொருட்கள்

 எங்கு சென்றாலும் உங்களுடன் இருக்க வேண்டிய 5 அத்தியாவசிய மேக்கப் சாதனங்கள் இதோ…


• வெட் கிளென்சிங் டிஸ்ஸு முகத்திலிருக்கும் அழுக்கு, தூசி ஆகியவற்றை சுத்தம் செய்து மேக்கப் போட்டால் தான் முகம் பளிச்சிடும். இதற்கு ஈரமான வெட் கிளென்சிங் டிஸ்ஸு போல் வேறு எதுவும் இல்லை.

• ஃபவுன்டேஷன் : முகத்திலுள்ள மாசுகளை மறைத்து சீரான தோற்றத்தைத் தரும். மாய்ஸ்சுரைசர் மற்றும் ஸன்ஸ்கிரீன் உள்ள ஃபவுன்டேஷனைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இது முகத்தை மிருதுவாக வைக்கும் அத்துடன் வெய்யிலின் தீய கதிர்களிலிருந்தும் பாதுகாக்கும்.

• மஸ்காரா : மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு நொடியில் கண்களின் அழகை பன்மடங்கு அதிகரிக்கக் கூடியது. கண்களை பெரிதாக தோன்றவைக்கும் தன்மை இதற்கு உண்டு.

• லிப்ஸ்டிக் : இது உதடுகளுக்கு புத்துயிர் கொடுக்கும். உதடுகளுக்கும் கண் இமைக‌ளி‌ன் ‌மீது நிறத்தை சேர்க்க இது ஒன்றே போதும்.

• காம்பேக்ட் : மேக்கப்பிற்கு முழு வடிவம் கொடுப்பது பவுடர். இதற்கு காம்பேக்ட்டை உபயோகிப்பதே சிறந்தது. கண்ணாடியுடன் கிடைக்கும் காம்பேக்ட்டை வாங்கினால், தனியாக கண்ணாடியை எடுத்துச் செல்ல வேண்டாம்.

கூந்தல் உதிர்வதை தடுக்க ஆயுர்வேத குறிப்புகள்

 • வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து முதல் நாள் இரவு நீரில் வேகவைத்து அடுத்த நாள் வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது படிப்படியாக நின்று விடும். இவ்வாறு வாரம் இரு செய்து வர வேண்டும். ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


• கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை சம அளவு கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து பின்னர் குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

• வெந்தயம், குன்றிமணியை சம அளவு எடுத்து பொடி செய்து அதனை தேங்காய் எண்ணெயில் ஊறவைக்க வேண்டும். இந்த பொடி ஒரு வாரத்திற்கு நன்றாக ஊற வேண்டும். பின்னர் இந்த எண்ணெயை தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

• மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவி 30 நிமிடம் ஊற வைத்து குளித்து வந்தால் செம்பட்டை முடி நிறம் மாறும். இவ்வாறு வாரம் இரு முறை செய்து வரலாம்.

• ஒரு கைப்பிடி கறிவேப்பிலை அரைத்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சிவும். இந்த எண்ணெயை தலையில் தினமும் தொடர்ந்து தேய்த்து வந்தால் கூந்தல் நீளமாக வளரும்.

சரும பராமரிப்பில் விளக்கெண்ணை

 விளக்கெண்ணை எண்ணெயில் ரிசினோலியிக் ஆசிட் அதிகம் உள்ளது, இந்த ஆசிட் ஒரு சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சியை சரிசெய்யக்கூடிய ஒன்று. எனவே இத்தகைய எண்ணெயை அழகு பராமரிப்பில் பயன்படுத்தினால், சருமம் அழகாவதோடு, கூந்தலும் நன்கு பொலிவோடு காணப்படும்.


• தினமும் கைகளுக்கு விளக்கெண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தால், கைகளில் இருக்கும் சுருக்கங்கள் படிப்படியாக மறைந்து விடும். மேலும் தினமும் இரவில் படுக்கும் முன் நகங்களில் விளக்கெண்ணெயை வைத்து வந்தால், நகங்கள் நன்கு பொலிவோடு அழகாக வறட்சியின்றி காணப்படும்.

• விளக்கெண்ணெய்யை முகத்திற்கு தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவினால், நீர்ச்சத்து இல்லாமல் காணப்படும் சருமம் ஈரப்பசையுடன் இருக்கும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வரலாம்.

• குதிகால வெடிப்புக்கள் இருந்தால், தினமும் விளக்கெண்ணெய் தடவி வர, குதிகால்களில் இருக்கும் வறட்சி நீங்கி, வெடிப்புக்களும் விரைவில் காணாமல் போய்விடும்.

• கூந்தல் வளர்ச்சிக்கு விளக்கெண்ணெயை பயன்படுத்தி வாரத்திற்கு ஒரு முறை மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் சீவக்காய் போட்டு குளித்தால், கூந்தல் நன்கு வளர்ச்சியடையும்.

• வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு, சருமத்தில் ஏற்படும் அதிகப்படியான வறட்சியைப் போக்குவதற்கு, விளக்கெண்ணெயைப் பயன்படுத்த வேண்டும். இதனால் சருமம் மென்மையாவதோடு, வறட்சியின்றி பொலிவோடு காணப்படும்.

• இரண்டு டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய், 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில், 15 நிமிடம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதம் மூலம் சருமத்தில் இருக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை படிப்படியாக போக்கலாம்.

• சிலருக்கு இளம் வயதிலேயே முதுமை தோற்றம் காணப்படும். அவர்கள் விளக்கெண்ணெய் கொண்டு சருமத்தை தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால், தளர்ந்து காணப்படும் சருமம் இறுக்கமடைந்து, இளமை தோற்றத்தில் காணப்படும்.

ஆப்பிள் பேஸ் பேக்

 * சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக உங்கள் சருமம் பளபளப்பாக மாறுவதை காணலாம். 


* ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, இந்த கலவையை பஞ்சில் தொட்டு முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வரலாம். 

* ஆப்பிள் விழுது 1 ஸ்பூன் எடுத்து அதில் தேன் கலந்து முகத்தில் தடவி 15 ஊற வைத்து பின் முகத்தை கழுவி விடவும். இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கருமை நிறம் படிப்படியாக மறைவும். 

* ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும். கூந்தலுக்கு கண்டிஷனர் போட்டு போல் இருக்கும். 

* ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகவும், நீளமாகவும் வளரும்.